சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

August 10, 2016

சுஜாதா

சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை.

ரூ.300/-

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *