திமுக – அதிமுக : கிரானைட் மலையை விழுங்கியவர்வள்

ஜி. ராமகிருஷ்ணன் உண்மையில் 15 க்கும் அதிகமான இதில் தொடர்பு பெற்றுள்ளன. மூன்று நிறுவனங்களை மட்டும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பட்டிருப்பது ஏன்? கிட்டத்தட்ட 1 லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு…. 2009 ஆம் ஆண்டே பத்திரிகைகளில் கிரானைட் கொள்கைகள் குறித்த செய்திகள் வெளியாகின. முதலமைச்சர் கருணாநிதியிடம் இது பற்றி புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை….. தமிழகத்தில் நடைபெற்றுள்ள மிகப் பிரமாண்டமான கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை மற்றும் ஆற்று மணல் கொள்ளை ஆகியவற்றின் பின்னணியில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர் என்பது வெளிப்படை திமுக அதிமுக அல்லாத ஆட்சி அமைந்தால்தான் இந்த முறைகேட்டின் முழுப் பரிமாணமும் வெளிவரும். தவறிழைத்தவர்களை சட்டபடி தண்டிக்கவும் முடியும் ரூ.5/-

அமெரிக்க மாமாவின் அணுக்குடில்

எம்.கே.பத்ரகுமார் இந்திய-அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது,இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இது இந்திய வளர்ச்சியோடு பிர்கிய முடியாது என்கிறார்கள்.எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும்,நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும்,அதைவிட இந்த உடன்பாட்டால் அணுசக்தி தொழில்நுட்பத்துறையில்,நமது சுயசார்புக் கொள்கை மூலம் இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றம் கூட உண்மையில் பாதிப்படையும் என்று சரியாக வாதிடுவார்கள்.குறிப்பாக,நமது சொந்த முயற்சியில் வளர்த்துக்கொண்ட நமது அணுசக்தித் தொழில்நுட்பம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெரும் மதிப்பையும்,கவுரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த கவுரவத்தையும் இழந்து விட்டுத்தான் இந்தியா-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்தப் போகிறோமா? ரூ.50/-

வெல்வதற்கோர் பொன்னுலகம்

பிரகாஷ் காரத் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி150வருடங்களுக்கு மேலாகிவிட்டது.இந்தியாவின் மார்கசிய வல்லுநகர்கள் நால்வர் இந்த அறிக்கையை பற்றி விவரிக்கிறார்கள்.அறிமுகமாக பிரகாஷ் கர்த்தின் கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம் பற்றி அய்ஜாஸ் அகமது கட்டுரையையும்,கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது பற்றி இர்ஃபான் ஹபீப்பும்,150ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி பிரபாத் பட்நாயக்க் கட்டுரையும் இந்நூலில் உள்ளது. ரூ.80/-

Working Class & Current Challenges

M.K.Pandhe M.K.Pandhe who sacrified his life time to build and guide the working class movement in india was the president of CITU until his death. In this book, he narrates the history of the working class movement of India including the disunity within it and the necessity of its unity. It analyses the Socio-Economic problems confronting the working class ரூ.90/-

கப்’பஞ்சாயத்து:சாதியின் மற்றொரு கோரமுகம்

அசோகன் முத்துசாமி கட்டப் பஞ்சாயத்து தானே தெரியும் நமக்கு?அது என்ன’கப்’பஞ்சாயத்து?இங்கல்ல,ஹரியாணா,பஞ்சாப்,உ.பி,போன்ற வட மாநிலங்களில் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வரும்’கப்’பஞ்சாயத்துகள் சாதியத்தின் துருப்பிடித்த ஆயுதமேந்தி நிகழ்த்துகின்ற கோரச் செயல்களையும்,காதல் திருமணம் செய்து கொள்ளவோ,திருமணத்தின் மூலமாக சாதியை மறுக்கவோ,தலித்தாகப் பிறந்திருப்பின் உயர்சாதிப் பெண்ணை மணந்து கொள்ளவோ முடியாத ஒரு இருட்டு உலகத்தை இந்நூல் உணர்வுப்பூர்வமான மொழி நடையில் விவரிக்கிறது. ரூ.10/-

ஐக்கிய முன்னணி தந்திரம்

ஏ.நிசார் அகமது ஐக்கிய முன்னணி தந்திரம் என்பது சோசலிசப்புரட்சிக் கான அணிகளை ஒன்றுப்படுத்துவதற்க்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடாகும்.இதனை இந்திய மண்ணின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுத்துகிறது என்பது குறித்தும் இதில் பயணித்தப் பாதை,இன்னும் பயணிக்க வேண்டிய பாதை ஆகியவை குறித்தும் வளமான விபரங்களுடன் ஆழமான ஆய்வுடன் அதே சமயத்தில் எளிமையான நடையில் இந்நூலை நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். ரூ.20/-

காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்

அருணன் பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது.இரட்டை வாக்குரிமைதான் இருத்தி லட்சியம் என அம்பேத்கர் கருத்திருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை என் சேர்க்கவில்லை?இது போன்ற கேள்விகளுக்கு நீதானமான விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம். ரூ.25/-

மார்கசிய பார்வையில் அன்னை தெரசா

ராமசந்திர வைத்தியநாதன் அன்னை தெரசாவைப் பற்றி அவரது சேவைகளைப்பற்றியும் இதுவரை கூறப்படாத ஒரு புதிய கண்னோட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார்,இந்நூலின் ஆசிரியர் ரூ.5/-