மீன்மலர்

கடவுள், இசை, காமம் என எல்லாவற்றையுமே விவாதத்துக்குள்ளாக்கும் வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு. மீனையும் மலரையும் ஒப்புமைப்படுத்தும் சிறுகதை ஒரு தத்துவவாதத்தை சிறுகதையினூடே சிறப்பாகச் செய்திருக்கிறது. மனக்குகை ஓவியம் சிறுகதை, மனித வாழ்வின் உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. மனம் என அமையப் பெற்ற உயிரினமான மனிதனுக்கான சிக்கலை விவரிக்கும் கதை அது. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத நீரோடை போன்ற நடையில் இவற்றை வாசிப்பது பேரனுபவம். ரூ. 85/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ரூ.160/-

செல்லுலாய்ட் சித்திரங்கள்

தமிழ்மகன் 90-களின் சினிமா பிரபலங்கள் குறித்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. ஆசிரியருக்கும் சினிமா பிரபலத்துக்குமான நேரடியான அனுபவம் நேர்மையான சான்றாக இருக்கிறது. ரூ.100/-

மானுடப் பண்ணை

தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது. ரூ.160/- உயிர்மை பதிப்பகம்