நீலம்

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது. – ஜெயமோகன் ரூ.250/-

அவன் ஆனது

‘அவன் ஆனது’ நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சா. கந்தசாமிக்கு முன்னுரையும் வேண்டாம்; மதிப்புரையும் வேண்டாம். அவர் பெயர் போட்டிருந்தால் உடனே அதைப் படிக்கக் கிடைத்த பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவர் மேதைமை, நேர்த்தியைத் தவிர வேறெதையும் தந்ததும் கிடையாது; ஏற்றதும் கிடையாது. – ஞானக்கூத்தன் ரூ.170/-

ஆட்கொல்லி

க.நா.சு.   ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்-காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வார-வாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது-. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதி-யாவது அவர் காரணமாக வந்தவைதான். இள-வயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான். ரூ.70/-

1984

ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார். ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: க.நா.சு ரூ.210/-

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள். அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? எங்கிருந்து திரள்கிறது அக்கலை? எவற்றின் நீட்சி அவை? அதன் தொடர்ச்சி எவை? என உரைநடையிலிருந்து விலகிய வேறொரு மொழியில் பேசுகின்றன இக்கட்டுரைகள். -சாம்ராஜ்

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்

யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார். ரூ.140/- – பிரபஞ்சன்

இருட்டிலிருந்து வெளிச்சம்

சினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதி யானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்பின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கே யுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள் மீது அவர் கொண்டுள்ள பரிவும், அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன. – அசோகமித்திரன் ரூ.240/-

அவள் அப்படித்தான்

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள். ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. ரூ.120/- – சோமசுந்தரேஸ்வர்

மிட்டாய்க் கடிகாரம்

முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை… குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது. வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்… இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன. நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை. – உமா மகேஸ்வரி ரூ.100/-

தலைமறைவு காலம்

இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர் களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறேன். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கெனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச் சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஏமாற்று விளையாட்டுத்தான். எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள், சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள் மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன. – யவனிகா ஸ்ரீராம் ரூ.90/-