உருமாற்றம்

ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில் : பேரா. ச.வின்சென்ட் நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார். ரூ.200/-

ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண் – பெண் பாகுபாடு போல இல்லை, மனிதர்களில் உள்ள பால் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துகள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு கையெழுத்து, குரல், சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். ஆண்பால் பெண்பால் நாவல் அந்த அற்புத முரண்பாட்டை படைப்பிலக்கியத்தின் வழியே அறிவியல் பூர்வமாகவும் உணர்த்துகிறது.

அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-  

எட்டிக்குளத்துப் பேய்கள்

தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம், மொழி, வாழ்வியல், விவசாயம், விஞ்ஞானம் என அனைத்துத் துறையிலும் செழுமையான ஞானம் பெற்றவர் இரா.கோவர்தன், இலக்கியத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். எட்டிக்குளத்துப் பேய்கள் அவருடைய நெடுங்கதைகளின் தொகுப்பு. ரஷ்ய இலக்கிய தாக்கம் கொண்ட அவருடைய எழுத்துக்கள் தமிழுக்குப் புதிய வரவு. ரூ.180

வனசாட்சி

இலங்கையின் மலைகளில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி அதற்கு எருவாகிப்போன தமிழ் மக்களின் கதை. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரத்தம் கொதிக்கவைக்கும் அந்த தியாகச் சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாவல். மலையிலும் கடலிலும் மறைந்துபோன அந்த தமிழர் உழைப்பை புனைவின் ஊடே பதிவு செய்திருக்கிறது இந்த நாவல். ரூ.260/-

தாரகை

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்… வெற்றிடமா? வெற்றி மகுடமா? ரூ. 165/-

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

சிறுகதை உலகில் தடம் பதித்த நூல். ஆனந்த விகடன், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. வித விதமான மனிதர்களை அடையாளம் காட்டும் அற்புதமான சிறுகதைகள். இறந்து போனதாக டாக்டர்களே கைவிட்டுவிட்ட ஒருவனின் மரணப் போராட்டத்தைச் சொல்லும் நினைவின் நிழல், பாம்புகளை நேசிக்கும் ஒரு வினோத மனிதனின் செயல்களுக்கு ஒளிந்திருக்கும் உண்மைக் காரணத்தைச் சொல்லும் இது பாம்புக் கதை அல்ல… என வாசிப்புச் சுவையுடன் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.   ரூ. 185/-

ஆபரேஷன் நோவா

தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. ரூ.160/-

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

கணியன்பாலன் சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ரூ. 950/-

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பேத்கர் உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. ரூ. 100.00