தமிழக பள்ளிக் கல்வி

எஸ்.எஸ்.ராஜகோபால் “‘கி.பி.2000க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி’ என்பது சர்வதேச இலக்கு.இதை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல்திட்டம் வகுக்கும் பணியில் கல்வியாளரும்,பல பத்தாண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய அனுபவம் மிக்கவருமான ச.சீ.இராசகோபாலனை ஈடுபடுத்தியது.அதன் விளைவாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையைச் செயல்படுத்துவதற்கு அரசும்,கல்வித் துறையும் முனையவில்லை.இந்நிலையில் பல்வேறு பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியபோது,தனது நாற்பதாண்டு ஆசிரியப் பணியில் அறிந்திராத பல உண்மைகளை அறிந்ததாகக் கூறுகிறார் ஆசிரியர்.கும்பகோணம் பள்ளித் தீவிபத்து,அதைத் தொடர்ந்து இன்று விவாதத்திற்கு வந்துள்ள பல முக்கியப் பிரச்சனைகளான பெற்றோர்,அரசு,ஆசிரியர்களின் பொறுப்புகள்,சமச்சீர் கல்விமுறை,கல்வித்துறை முரண்பாடுகள்,பதின்நிலைப் பள்ளிகளும்,பல்கலைக்கழகமும்,மக்களின் எதிர்பார்ப்புகள்,பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள்,கல்வித் துறையின் முதற்கடமை,மொழிப்பாடம்,தேர்வுகள்,தொழிற்கல்வி,சுயகட்டுப்பாடு இவை பற்றிய தன் அனுபவத்தின் ஆழ்ந்த சமூகப் பொறுப்பின் அடிப்படையில் இக்கட்டுரைகளைத் ‘தினமணி,ஜனசத்தி,தமிழ் ஓசை’ நாளிதழ்களில் எழுதி வந்தவர் திரு.இராசகோபாலன்.அனைவருக்கும் கல்வி தொடர்பான பிரச்சினைகளில் தலையிட்டு தொடர்ந்து இயங்கி வரும் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம்2008ம் ஆண்டிற்கான முன்னோட்ட முயற்சியாக இந்நூல் உட்பட25நூல்களை கல்வி எனும் பொருள் சார்ந்தே வெளியிட்டு ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கு அடித்தளம் இட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.கல்வி குறித்த அக்கறையுள்ள அனைவரும் வாசித்து உள்வாங்கி விவாதிக்க வேண்டிய கருத்துகள் இவை.” ரூ.40/-

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை

பாவ்லோ ப்ரையிரே ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு பரிசாக வழங்கப்படும் ஒன்றாய் அர்த்தப்படுத்தப்ட்டுள்ளது என்கிறார் ஃப்ரையிரே ரூ.95/-

ரோஸ்

ஆயிஷா இரா.நடராசன் ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம்.’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை.நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது.ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது.ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத¢துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார்.அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்-குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேச¤க்கொள்ள வேண்டும்.இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.புத்தகத்தை வாங்கிவிடுவோம். ரூ.40/-

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

டி.வி.புருஷோத்தமன் முற்போக்குக் கல்விக்கான அணுகு முறையை ஏற்றுக்கொண்ட கல்வியாளர்கள் ஜான் ஆமோஸ் கொமேனியஸ்,ஜீன் ஜாக்கஸ் ரூசா,ஜோஹான் ஹென்ரிச்,பெஸ்ட்டலோசி,ஃபிரெட்ரிக் வில்லியம்ஸ் அகஸ்ட் ஃபுரோபல்,ஜான் டுயுவி,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரின் வாழ்க்கையும் சிந்தனைகளும்தான் பரிசோதிக்கப்படவும் அறிமுகப்படுத்தப் படவும் செய்யப்பட்டுள்ளன. ரூ.40/-

கல்வியில் நாடகம்

பிரளயன் வகுப்பறைச் சூழலின் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது.ஒரு பாடத்தை,சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியப்கூடிய வாய்ப்பை இந்த நாடக முயற்சி வழங்குகிறது. ரூ.30/-

ஓய்ந்திருக்கலாகாது

அரசி-ஆதிவள்ளியப்பன் இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள்.சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும் முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும்,சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும்.அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு. ரூ.70/-

தாகூர்:கல்விச் சிந்தனைகள்

ஞாலன் சுப்பிரமணியம் கல்வியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த குருதேவர் இந்த மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டார்.இந்த மூலக்கூறுகள் சீரான அமைதியுடன்,ஒழுங்குடன் இணைந்து செல்லும்போது மேம்பட்ட சமக உறவுகள் உருவாகும் என அவர் நம்பினார். ரூ.80/-

விவேகானந்தர்:கல்விச் சிந்தனைகள்

பேரா.அ.கருணானந்தம் மாணவர்கள்,இளைஞர்கள் உலகில் கல்வி என்ற குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிய சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் கருத்துகள் கண்ணோட்டங்கள் எப்படி இருந்தன என்பதை விமர்சனப் பார்வையுடன் கூறும் நூல். ரூ.40/-

உலகக் கல்வியாளர்கள்

ஆயிஷா இரா.நடராசன் மாண்டேசாரி,ஜான் ஹோல்ட்,ரெனெய் ஸாஸோ,பாலோ பிரைரே,ஸெலென்கோ,சார்லஸ்,சார்லஸ்,மைக்கெல் எவி,பால்லவ் மற்றும் ஜான் டூவி,,,,உலக அளவில் மாற்றுக் கல்வியை மூன் மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்யும்,ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். ரூ.30/-

காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள்

பேரா.ராஜு “வகுப்பறை நட்பை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு சிறு எட்டும் என்றென்றும் நம்மால் மறக்க முடியாத ஆசிரியை உமா மகேஷ்வரிக்க்குச் செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்.” ரூ.15/-