காந்தியை கொன்றவர்கள்

மனோகர் மல்கோங்கர் தமிழில் : க.பூர்ணசந்திரன் நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர். அதனால் அவர் மூக்குப் பொட்டு (நாது£, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அக்கம்பக்கத்தவர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். ரூ.300/-

அவரை வாசு என்றே அழைக்கலாம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள  சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார் . இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக, வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் . இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள  “வாசு” ஒரே நேரத்தில்  தோழராகவும், புரட்சியாளனாகவும், நண்பனாகவும், அந்நியனாகவும் இருந்துள்ளார்.  இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை  சுப்ரன்ஷு சௌத்ரி  வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து  பெறப்பட்ட உண்மைக்  கதைகள் மற்றும் தரவுகளின் மூலம்  மாற்றியமைக்கிறார். இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான, பாகுபாடற்ற, நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது. ரூ.180/-

கலகம் செய்யும் இடது கை

ரூ.90/- வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.

காட்பாதர் – (திரைக்கதை –தமிழில்)

ஆசிரியர் – ராஜ் மோகன் சினிமா விலை- 200 இன்று வரை தலைசிறந்த பத்து படங்களுல் ஒன்றாக விமர்சகர்களால் உல்கம் முழுக்க கொண்டாடப்படும் காட்பாதர் படத்தின் திரைக்கதை நூல் விறுவிறுப்பான காட்சிகளுடன் மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு நம் கண்முன் அசலாக நிகழ்வது போன்ற காட்சி சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் திரைக்கதை ரசிகர்களுக்கு கொடை

நீல நாயின் கண்கள்

ஆசிரியர் – அசதா மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ரூ. 100 உல்கின் த்லைசிறந்த சிறுக்தை எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகளின் தொகுப்பு .த்லைப்பு கதையான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் நீல நாயின் கண்கள், வில்லியம் பாக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா .ஜேம்ஸ் தார்பரின் வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை போன்ற அவசியம் படிக்க வேண்டிய அற்புத சிறுகதைகளின் தொகுப்பு இது