வந்தாரங்குடி

கண்மணி குணசேகரன் எண்பதுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இருபெரும் திருப்பங்களின் ஊடே பயணிக்கும் நாவல். ஒன்று 69 சதவிகித இட ஒதுக்கீடுக்காக வன்னியர் சங்கம் நிகழ்த்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம். இரண்டு, நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்துக்காக பல கிராமங்களை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம். இரண்டிலும் சம்பந்தப்பட்ட பெருவாரியான வன்னிய சமுதாய மக்களின் இழப்புகளைச் சுற்றிச் சுழலும் நாவல்.