அவரவர் பாடு

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.   ரூ.80/-

பொய்த் தேவு

நான் அளவுக்கு அதிகமாக சிரமம் எடுத்துக்-கொண்டு எழுதிய நாவல் பொய்த் தேவு. பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்-கிற இடத்தில், எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோ-பாவமும் இருக்கும் என்பது நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக் கொள்கிற எல்லா லட்சியங்-களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது-தான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை. – க.நா. சுப்ரமண்யம் ரூ.180/-

அசுரகணம்

மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம். ரூ.100/-