அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே

எம்.ஜி.சுரேஷ் எழுதிய இந்த சிறிய நூல் மேற்கத்திய தத்துவப் போக்கின் சுருக்க்மான வரலாறு. சாக்ரடீஸ் காலம் முதல் தெரிதா காலம் வரை அலசும் அற்புத நூல். பின்நவீனத்துவத்தைப் பின் பற்றி பல நூல்கள் எழுதியவர். ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ (1999), ‘அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்'(2000), ‘சிலந்தி’ (2001), ‘யுரேகா என்றொரு நகரம்'(2002), ’37′(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும் ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ (2004) என்கிற நூலும் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ரூ.70/-

நன்றி ஓ ஹென்றி

எஸ்.சங்கரநாராயணன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியவர். 75 நூல்களுக்குமேல் எழுதியவர் என்பதைவிட, முக்கியமானது ஒன்று உண்டு, பல இளம் எழுத்தாளர்களை அவர்களின் முதல் சிறுகதைகளிலேயே இனம் கண்டு, எழுதத் தூண்டுகிறவர். பல எழுத்தாளர்களுக்கு இல்லாத இந்தக் குணம்தான் அசாதாரணமானது. இலக்கிய உலகில் அவருக்கு அது ஏற்படுத்தியிருக்கும் இடம், மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பாக்கியம்.