19-ம் நூற்றாண்டு சூழலில் சாதி வகித்த பாத்திரம் என்ன, தமிழர்களின் இன்றைய பொருளாதார நிலைக்கு, நாவல் வழி விளக்கம் என்ன என்பதையும் சிந்திக்க இந்த நூல் உதவும் எனவும் நம்புகிறேன். ஏனென்றால் முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்துவிட்ட விவசாய அநியாயத்தைச் சீர்படுத்த, தன் வாழ்நாளெல்லாம் போராடிய மனிதனின் ரத்தமும் சதையுமான இந்த வரலாறு அதைச் சாத்தியப்படுத்தும்.

இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு ...

20 தலைசிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.

கல்கி எழுதி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரும் வாசக வரவேற்பைப் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவல். ஐந்து பாகமும் அடங்கிய இந்த நூல் ஆயிரம் ரூபாய் விலை கொண்டது. இந்த நூலை 750 ரூபாய்க்கு வழங்குகிறோம்.

பெர்முடா முக்கோணம் எனப்படும் மர்மக் கடல் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அங்கே அடிக்கடி கப்பல்களும் விமானங்களும் விபத்துக்குள்ளாவது ஏன் என்ற ஆராய்ச்சி நூல்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. திரைப்படங்களும் வந்துள்ளன. தமிழில் அது பற்றி எழுதப்பட்ட சுவாரஸ்யமான நூல் இது. உயிர் என்றால் என்ன? வேற்றுகிரக வாசிகள் என்பவர்கள் உண்மையில் உள்ளனரா? பூமிக்கு அவர்கள் வந்து போவதாகச் சொல்லப்படுவது உண்மையா போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.

அப்பர், திருஞான சம்பந்தர், அப்ரிக்காவில் நடக்கும் தங்க வேட்டை இத்தனைக்கும் மூலமாக இருக்கும் ஓர் எறும்பு என சுவாரஸ்யமான நாவல். வரிக்கு வரி விறுப்பு. எறும்பு, அப்பர், தங்கம் மூன்றையும் இணைக்கும் விறுவிறுப்பான கதை முடிச்சு. ராணி வார இதழில் தொடர்கதையாக வெளி வந்தது.

ஊடகத் துறையில் பெண் எதிர்கொள்ளும் சவாலையும் ஒரு அழகிய காதலையும் இணைத்து மிக இயல்பான படைப்பைத் தந்திருக்கிறார் ஜி.மீனாட்சி. எதார்த்தமான விறுவிறுப்பான நாவல்.

ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது. ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா, மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக, இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வர...

ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம்...

இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம். வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழி மட்டுமே தரப்பட்டது. அந்த அடையாளம் வெள்ளையர்களுக்கானது. இந்தியர்கள் அதில் அடங்கவில்லை. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல ஏதோ ஒரு வகையில் நம...

404 Error!

The page you are looking for could not be found!