Description
ஸ்வாமி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றதால், பொருளைத் தேடி ஓடும் செயலையே முதன்மையாகக் கொண்டு ஓயாது பாடுபடும் உள்ளம், வாழ்வின் அமைதிக்கான அருள் தேடும் செயலை மட்டும் விட்டுவிடுகிறது. பொருள் அதிகம் குவிந்துவிட்ட பிறகு ஏதோ ஒரு வெறுமை மனத்தை ஆட்கொள்ளும். அப்போது மனம் நிம்மதியைத் தேடி ஏங்கி நிற்கும். உடனே தியானம், யோகம் என்று நாடிச் செல்லும். நம்முடைய ஆத்மாவுக்கு பொருள் தரும் பொலிவைவிட, அருள் எனும் மருள் நீக்கிய மழையே & அமைதியே தேவையானது. அப்படிப்பட்ட அமைதியை அடைய என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் போன்ற கேள்விகள் நிறைய பேருக்குத் தோன்றும். பணிச்சுமை, நெருக்கடி, விரும்பத்தகாத விஷயங்கள், மனத்துக்கு ஒவ்வாத சுற்றுச் சூழல் என்று பல்வேறு காரணிகள், மனிதனின் மன நிம்மதியைக் குலைத்து, மனத்துக்கு படபடப்பையும் அலைக்கழிப்பையும் தோற்றுவிக்கின்றன. இத்தகைய சூழலில் இளம் தலைமுறையே இன்று யோக மார்க்கத்தையும் தியானத்தையும் தேடிச் செல்கின்றன. அப்படி தேடிச் செல்லும்போது, எது சரியானது, யார் சரியாகப் பயிற்றுவிப்பார் போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே. தியானம் என்பது என்ன, தியானம் செய்யும்போது எதை எண்ணி திய
ரூ.70/-
Reviews
There are no reviews yet.