Description
என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது.
என் கவிதைகளில் விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் தனிமையின் ரீங்காரம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். தனிமை வாழ்வு எனக்கு நேர்ந்ததா அல்லது தேர்வா என்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. எனினும் அதனோடு இசைந்து அதன் எல்லா வண்ணங்களோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வண்ணங்களின் குரல்களாகவே கவிதைகள் உருக்கொள்கின்றன.
சி. மோகன்
Reviews
There are no reviews yet.