Description
பிரபுநந்த கிரிதர்
அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை! மனித வாழ்வு செம்மையுறவும் பயனுடையதாகப் பரிமளிக்கவும் எத்தனையோ குருமார்கள் மனிதர்களோடு மனிதர்களாக இப்பூவுலகில் தோன்றி நன்மொழிகளை நல்கியிருக்கிறார்கள். எளிமையும் ஈர்ப்பும் நிறைந்த சின்னச் சின்னக் கதைகள் மூலம் அருளுரைகள் வழங்கி, மனிதகுலம் அமைதியுடன் வாழ வழிகாட்டியிருக்கிறார்கள். பக்தி, யோகம், மந்திர_தந்திரங்கள் அனைத்தும் ஞான மார்க்கத்திலேயே கற்றுத் தேர்ந்த குருமார்கள், வெறுமனே அற்புதங்கள் நிகழ்த்துவதற்காக மட்டும் இந்த உலகில் பிறப்பெடுக்கவில்லை. மனிதனுக்கு அவனது பிறப்பின் நோக்கத்தை உணர்த்தி, இயற்கையோடு இனிதாக இணைத்து வைக்கவேண்டியே அவதரித்திருக்கிறார்கள். தவவாழ்வு வாழ்ந்த குருமார்களின் அறிவுரைகளும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களும் இருளில் தவிக்கும் மனிதர்
ரூ.75/-
Reviews
There are no reviews yet.