Description
மெரீனா
பக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது… _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உணர்வு. இயல்பான வசனங்களும், யதார்த்தமான சம்பவங்களும் இந்த நாடகாசிரியரின் தனி முத்திரை. எப்போதுமே இவருடைய படைப்புகளில் நகைச்சுவை திணிக்கப்படுவதில்லை; வசனங்களில் இரட்டை அர்த்தங்கள் நுழைக்கப்படுவதில்லை! பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் மெரீனா எழுதி, பின்னர் மேடையேற்றப்பட்ட தனிக் குடித்தனம் நாடகம் இன்று வரை பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. இப்போது கூட்டுக் குடித்தனம். இது மெரீனாவின் புத்தம் புது நாடகம். இந்த நாடகத்தில் நிகழ்கால பிரச்னையை மாடர்ன் டச் கொடுத்து சுவையாக அலசியிருக்கிறார் நாடகாசிரியர். இன்று பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சம்பவம்தான் நாடகத்துக்கு மையம். கடல் கடந்து வாழும் மகனும், மருமகளும், பேத்தியும் சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்புவதையும், ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இனி வாழ்க்கையைப் பயணிக்க வேண்டும் என்று மகனைப் பெற்றவர் விரும்புவதையும், இறுதியில் மருமகள் எடுக்கும் திடீர் முடிவையும், வழக்கம்போல் செயற்
ரூ.35/-
Reviews
There are no reviews yet.