Description
பொ.வேல்சாமி
கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித
அறச்செயல்களாகவும், அரசர்களின் வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் வளமான
நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோவில்களுக்கு உடைமையாக இருந்தன எனபதையும், தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக்
கோவில் சபைகளே நடத்திவந்தன என்பதையும் பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவற்றின் அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில்
பங்குபெற்ற உயர்சாதியனர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டு வந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலிக்கும் நில
உடைமைக்கும் அவற்றை நிர்வாகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும்.
அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ.வேல்சாமி தொடங்கி வைத்துள்ளார்.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.