சுஜாதாவின் குறுநாவல்கள் 1

380.00

இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே.

Categories: , , , Tags: , ,
   

Description

சுஜாதா

இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே.

ரூ.380/-

Additional information

Weight 0.587 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுஜாதாவின் குறுநாவல்கள் 1”

Your email address will not be published. Required fields are marked *