Description
1987-ல் எழுதப்பட்ட இந்த நாவல் 1996-ல் புத்தக வடிவம் பெற்றது. அன்றைய நாளில் இயக்குநர் சேரன் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அவர்தான் நூலுக்கு முன்னுரை வழங்கினார். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு காதல் ஜோடியை இணைத்து வைப்பதுதான் கதை. காதலர்களைச் சேர்த்து வைத்த அந்த நால்வரும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள் ரத்தமும் சதையுமாக நாவலில் எதார்த்த இலக்கியமாக எடுத்து வைக்கப்பட்டது. பின்னாளில் நாடோடிகள் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று இதே சாயலில் வெளியானது. என் நாவலைத் திருடிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. இளைஞர்கள் பலரும் எதிர்கொள்ளும் எண்பது- தொண்ணூறுகளின் கதை இது. அந்தப் படத்தின் கதாசிரியரும் அந்த ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பார்.
Reviews
There are no reviews yet.