மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
Export date: Fri Mar 29 0:07:24 2024 / +0000 GMT



தேவி தரிசனம்

Price: 95.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/

 

Product Summary

நம் பாரம்பரியத்தில் பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் அருமை, பெருமை, இன்பம், உற்சாகம் எதுவாக இருந்தாலும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், பெண்களுக்குத் தனி அந்தஸ்தைக் கொடுக்கிறோம்; முன்னுரிமை அளிக்கிறோம். பெண்களை, சக்தியின் சொரூபமாகவே பார்க்கிறோம். வழிபாட்டிலும் அதைக் கடைப்பிடிக்கிறோம். சக்திக்கு நம் தேசம் முழுவதும் எண்ணற்ற தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தேவி, காளி, துர்கா, கௌமாரி, முத்துமாரி என பல்வேறு பெயர்களில், பல ஊர்களில் அம்மனுக்கு ஆலயங்கள் உள்ளன. திருமண வரம் வேண்டும், குழந்தை வரம் வேண்டும், தீராத நோய் தீர வேண்டும், எண்ணிய செயல் ஈடேற வேண்டும்... என்று பல கவலைகளோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் ஆலயங்கள் ஏராளம். அவற்றில், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த கோயில்கள் பல பிரசித்தமானவை. அப்படிப்பட்ட ஆலயங்களில் வீற்றிருக்கும் தேவியரின் சிறப்புகளையும், தலபுராணம், ஆலயத்தின் அமைப்பு, ஆலயம் இருக்கும் இடம், நேர்த்திக்கடன் செய்வது... போன்ற தெளிவான தகவல்களோடு, சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், தேரோட்டம், தீர்த்தவாரித் திருவிழா போன்ற வைபவங்கள் குறித்த தகவல்களும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் படிப்பதற்கு மட்டுமல்ல, நேரில் சென்று தரிசிக்கவும் வழிகாட்டக்கூடிய அற்புதமான நூல்.

Product Description

வி.ராம்ஜி

நம் பாரம்பரியத்தில் பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் அருமை, பெருமை, இன்பம், உற்சாகம் எதுவாக இருந்தாலும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், பெண்களுக்குத் தனி அந்தஸ்தைக் கொடுக்கிறோம்; முன்னுரிமை அளிக்கிறோம். பெண்களை, சக்தியின் சொரூபமாகவே பார்க்கிறோம். வழிபாட்டிலும் அதைக் கடைப்பிடிக்கிறோம். சக்திக்கு நம் தேசம் முழுவதும் எண்ணற்ற தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தேவி, காளி, துர்கா, கௌமாரி, முத்துமாரி என பல்வேறு பெயர்களில், பல ஊர்களில் அம்மனுக்கு ஆலயங்கள் உள்ளன. திருமண வரம் வேண்டும், குழந்தை வரம் வேண்டும், தீராத நோய் தீர வேண்டும், எண்ணிய செயல் ஈடேற வேண்டும்... என்று பல கவலைகளோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் ஆலயங்கள் ஏராளம். அவற்றில், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த கோயில்கள் பல பிரசித்தமானவை. அப்படிப்பட்ட ஆலயங்களில் வீற்றிருக்கும் தேவியரின் சிறப்புகளையும், தலபுராணம், ஆலயத்தின் அமைப்பு, ஆலயம் இருக்கும் இடம், நேர்த்திக்கடன் செய்வது... போன்ற தெளிவான தகவல்களோடு, சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், தேரோட்டம், தீர்த்தவாரித் திருவிழா போன்ற வைபவங்கள் குறித்த தகவல்களும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் படிப்பதற்கு மட்டுமல்ல, நேரில் சென்று தரிசிக்கவும் வழிகாட்டக்கூடிய அற்புதமான நூல்.

ரூ.95/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.144 kg

 

Product added date: 2016-10-07 13:38:48
Product modified date: 2022-06-10 10:55:21

Export date: Fri Mar 29 0:07:24 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.