Description
ஞாலன் சுப்பிரமணியன்
கோடானகோடி இந்திய மக்களின் ;கண்மணி; எனத் திகழ்ந்த ஜவகர்லால்நேருவுக்கு “கலப்பற்ற மார்கசியமும் அறிவியல் சார்ந்த சோசலீசமும் நன்கு தெரியும்.” ஆனால் இந்திய நாடு தனக்கே உரிய வழியில் அவற்றை உள்வாங்கிப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கருதினர். ஆதனால் தான் காந்தியடிகளின் தலைமையை ஏற்றுச் செயல்பட அவரால் முடிந்தது. விடுதலை போரில் வன்முறை தவிர்க்க இயலாதது என் அவர் உணர்ந்திருந்தார். ஆனால் காந்தியடிகளின் உயிர்மூச்சான வன்முறை மறுப்பை ‘ஓர் உத்தி’ என்ற அளவில் ஏற்று நடந்தார். அதேபொழுதில் ஏகாதிபததியத்தின் பல்வேறு முகங்களை இனங்காண்பதில் முற்றான தெளிவுடன் இருந்தார். இந்த உண்மைகள் அவர் எதிர்கொண்ட வழக்குகளின் ஊடாகத் தெரிகின்றன. அவர் எதிர் வழக்காட மறுத்தார். இந்த வழக்குகள் அவற்றின் சட்ட நுணுக்கங்களுக்காக சிறப்பு பெறவில்லை; குற்றம் சாட்டப்பட்டவர் நேரு என்பதால் அவை புகழ்பெறுகின்றன.
ரூ.90/-
Reviews
There are no reviews yet.