Description
பா.சு.ரமணன்
சாதாரண மனிதர்களாகப் பிறந்த சிலர், தங்களுடைய தீர்க்கமான எண்ணங்களின் மூலமாகவும், அந்த எண்ணங்களில் வெளிப்படும் சொல், செயல்களின் மூலமாகவும் மற்றவர்கள் வணங்கி வழிபடக்கூடிய நிலைக்கு உயர்கின்றனர். அந்த மகான்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் பிற்காலத் தலைமுறைகள் பின்பற்றக்கூடிய வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட உன்னதமான நிலைக்கு உயர்ந்த மகான்களின் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் ‘ஸ்ரீ அன்னை’. தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் சாதகர்களுக்கும் கருணை ஒளியாக விளங்கும் ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தொடர்ச்சியான ஆன்மிகத் தேடலும், இந்தியத் தத்துவங்கள் மீது ஏற்பட்ட காதலும் ஸ்ரீ அன்னையை இந்தியாவை நோக்கி ஈர்த்து, ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பணியில் ஈடுபட வைத்தது. அதிமனித உருவாக்கத்துக்கு என்று தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த ஸ்ரீ அன்னை, இன்று அன்பர்களுக்கெல்லாம் அடைக்கலம் தரும் ஆலயமாக உயர்ந்து நிற்கிறார். ஸ்ரீ அன்னையினுடைய வாழ்வின் ஆதாரச் சம்பவங்களைக் கொண்டு அழகு தமிழில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கு
ரூ.60/-
Reviews
There are no reviews yet.