வெற்றிபெற்ற விவசாயப் பெண்கள்

90.00

இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!

Out of stock

Description

ஜல்லிப்பட்டி பழனிச்சாமி

இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!
ரூ.90/-

Additional information

Weight 0.146 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெற்றிபெற்ற விவசாயப் பெண்கள்”

Your email address will not be published. Required fields are marked *