Description
ஸ்ரீ வேணுகோபாலன்
ஆன்மிக வரலாற்றின் அற்புத அவதாரமாகத் தோன்றி, அருள்பாலித்து, பக்தகோடிகளைப் பரவசப்படுத்திக் கொண்டிருப்பவர், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா. ‘சொல் வண்ணம் செயல்’ என தொண்டு உள்ளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகவானின் அருளாசியால், நாடுகடந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்பவர்கள் பலர். நோய்நொடி கண்டு பதறி ஓடிவந்து பாபாவின் பாதம் பணிபவர்கள், அவரது கருணைப் பார்வையால் நலம் பெற்று, நல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அன்றாடக் கவலைகளுக்கெல்லாம் மருந்து தேடி அலைந்தவர்கள், பாபாவின் அருள்வாக்கால் ஆத்ம ஞானம் பெற்று வருகிறார்கள். ‘சாயி பாகவதம்’, ‘சாயி புராணம்’, ‘சாயி இலக்கியம்’ என்றெல்லாம் பகவானின் லீலைகளை உலகம் முழுக்கப் பரப்பி வரும் பாபா பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. ‘பகவான் ஓர் அவதார புருஷர்’ என்பதை தங்கள் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்து ஏற்றுக்கொண்ட அவர்கள், பாபாவின் புகழைப் பாடினாலும் பாடக் கேட்டாலும் புண்ணியம் சேரும் என்று பக்தி கலந்த மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கிறார்கள். அந்தவகையில், பாபாவின் மகிமைகளையும், உலக மக்களுக்கு அவர் ஆற்றிவரும் த
ரூ.155/-
Reviews
There are no reviews yet.