பதுங்குகுழி

பொ. கருணாகரமூர்த்தி அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் இவர் எளிதாக இடம் பெறுகிறார். இவரது கலை தமிழுக்குக் கிடைத்த ஒரு பேறு என்பதில் ஐயமில்லை. கோவை ஞானி (முன்னுரையிலிருந்து) ரூ.130/-

சுகுணாவின் காலைப் பொழுது

மனோஜ் நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்- இடைவெளிகள், மொளங்கள், நுண்ணிய அங்கதம் என – ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களுக்கு உதாரணமாக அமைகின்றன. ரூ.70/-

வெள்ளைப் பல்லி விவகாரம்

மாயா 90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க மனதின் அதர்க்கத்தையும் வெகு நுட்பமாக இக்கதைகள் கடந்து செல்கின்றன. நிர்ணயிக்க முடியாத புள்ளிகளின் வழியே நகர்ந்துகொண்டிருக்கும் சமகால வாழ்வின் அபத்தங்களை, அர்த்தமின்மைகளை, குழப்பங்களை லக்ஷ்மி மணிவண்ணனின் மொழி மிக நூதனமாக சித்தரிப்புகளின் வழியே கையாள்கிறது. ரூ.90/

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன. ரூ.60/-

மணற்கேணி

யுவன் சந்திரசேகர் கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வது என்ற கேள்வியின் விளைவே யுவன் சந்திரசேகரின் இந்த நூறு குறுங்கதைகள். சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர்கொள்ளக்கூடிய கணங்கள் இக்கதை களின் ஆதாரமாக இருக்கின்றன. மிகக்குறைவான வாக்கியங் களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள், விவரணைகள், உரையாடல்கள் குறுங்கதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை உணர்த்துகிறது. இவை குறுங் கதைகளாக எழுதப்பட்டபோதும் அவற்றிற்கிடையே ஓடும் பொது நீரோட்டம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது. ரூ.180/-

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

எஸ். ராமகிருஷ்ணன் கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோதும் எவ்வளவு இடைவெளியும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தையும், அர்த்தமற்ற தினசரிவாழ்வின் பசப்புகளையும் கேலி செய்கின்றது. அந்தக் கேலி நம்மைச் சிரிக்க செய்யும் அதே நேரத்தில் குற்றவுணர்வு கொள்ளவும், நிம்மதியற்றுப் போகவும் செய்கிறது என்பதே இக்கதைகளின் தனிச்சிறப்பு. ரூ.120/-

தங்கர் பச்சான் கதைகள்

தங்கர்பச்சான் செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம், மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செளிணிதுவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்ப்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவுசெய்யப் பயின்ற இக்கலைஞனுக்கு கதை சொல்வதன் வழியே தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்படுகின்றன. பிரேம் ரூ.210/-

சுஜாதாவின் மர்மக் கதைகள்

சுஜாதா சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க முடியாத மர்மத்தின் ரகசிய வழிகளைத் தனது சாகச நடையில் சுஜாதா தொடர்ந்து உருவாக்குகிறார். ரூ.230/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ‘பாலம்’, ‘குதிரை’ ‘ஒரு இலட்சம் புத்தகங்கள்’, ‘இரு கடிதங்கள்’, ‘தனிமை கொண்டு’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ரூ.440/-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

சுஜாதா சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை. ரூ.400/-