பெருமழை நாட்கள்

பெரும் மழை நாட்கள் நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. – சா.கந்தசாமி ரூ.160/-

முதற்கனல்

ஜெயமோகன்  ரூ.290/- மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது.

ஏழாம் உலகம்

ஜெயமோகன் ஒரு கனவு வழியாக ராமப்பனின் முகம் என்னுள் மீண்டபோது எழுந்த உத்வேகம் இந்நாவலை எழுத வைத்தது. இது ஒருவகை விடுதலை முயற்சி. என்னை அச்சுறுத்தி அருவருப்பூட்டிய ஓர் உலகு. இதன்மூலம் நானும் வாழும் உலகமாக ஆகிறது. ரூ.

நீலம் (பேப்பர் பேக்)

ஜெயமோகன்   நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை. ரூ.250/–

மானுடம் வெல்லும்

அரசர்களின் வாழ்க்கையை எழுதுவதே வரலாற்று நாவல் என்ற போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறிய வணிகர்கள், அரசு அதிகாரிகள், கவர்னர்கள் மற்றும் தாசிகள் என்று அனைத்து மக்களையும் தழுவிய மக்கள் வரலாற்று நாவல் என்று விமர்சகர்கள் இந்-நாவலைக் குறிப்பிடுகிறார்கள். பிரபஞ்சன் விலை ரூ.320/

கடல்புரத்தில்

கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்பு வழி’ யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன். வண்ணநிலவன் ரூ.100/-

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு ஓர் உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன். அசோகமித்திரன் ரூ.120/-

சாயாவனம்

சா.கந்தசாமி ‘சாயாவனம்’ ஓர் அபூர்வமான நாவல், தமிழ் படைப்பிலக்கியத்தில் ஒரு மைல்கல். நடை புதுமையானது. ஆனால் பரிசுத்தம் தோன்ற இருப்பது. முதலில் ஒரு கதை சொல்வதுபோல் தொடங்குகிறது கந்தசாமியின் உரைநடை. காலதாமதமே செய்யாமல் வனம் அழிப்புப் பகுதி வந்தடைந்தவுடன், ரசம் மிகுந்த நீண்ட கவிதையாக உருமாறுகிறது. ரூ.160/-

புத்ர

இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது. – லா.ச. ராமாமிருதம் ரூ.140/-

சட்டி சுட்டது

ஆர்.ஷண்முகசுந்தரம் ஷண்முகசுந்தரம், காந்தியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்நாள் முழுக்க அக்கொள்கைகளையே பின்பற்றி வந்தவர். அவருடைய நாவல்களில் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தியதும் உண்டு. ‘சட்டி சுட்டது’ நாவல் காந்தியத்தில் ஊறிய மனம் ஒன்றின் படைப்பு வெளிப்பாடு எனக் கொள்ளத்தகும். ரூ.150/-