நாகம்மாள்

ஆர்.ஷண்முகசுந்தரம் நான் படித்துள்ள வரையில் பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஸ்ரீ ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்க்கையைப் போலவே ஷண்முகசுந்தரத்தின் நடையும் கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது. ஒரு சிறு நாவல் இது. கதையென்று சொல்லும்படியாகப் பெரிதாக ஒன்றுமில்லை. உள்ள வரையில் வெகுமிடுக்காக, நேராக நடக்கிறது. இந்த நாவலிலே வந்து நடமாடுகிற உயிருள்ள பாத்திரங்களும், அவர்கள் பேசுகிற உயிருள்ள தமிழும்தான் முக்கியம். இந்த இரண்டிலும் ஷண்முகசுந்தரத்தினளவு தமிழ் நாவலில் வெற்றி கண்டவர்கள் வேறு யாருமில்லை என்பது என் அபிப்பிராயம். ரூ.120/-

நாய்கள்

ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். நகுலன் ரூ.75/-

நிழல்கள்

நகுலன் நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும். சுந்தர ராமசாமி ரூ.50/-

அசுரகணம்

மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம். ரூ.100/-

அபிதா

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் ‘உண்ணாமுலையம்மன்’. இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் ‘அபிதா’வாய்க் குறுகியபின், அபிதா = ‘உண்ணா.’ இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ‘ஸ்பரிசிக்காத’, ‘ஸ்பரிசிக்க இயலாத’ என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக்கொண்டேன். லா.ச.ராமாமிர்தம் ரூ.90/-

கிருஷ்ணப் பருந்து

ஆ.மாதவன் கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டா-ரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. ரூ.120/-

மிதவை

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது… பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி… – நாஞ்சில் நாடன் ரூ.120/-

ஆகாயத் தாமரை

அசோகமித்திரன் ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது. சா.கந்தசாமி ரூ. 140/-

இன்று

மனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல. ரூ.75/-

நினைவுப் பாதை

நகுலன் ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? ரூ.190/-