சங்க இலக்கிய பதிவுகள்

அருணன் அறிவியல் வளர்ச்சி,அறிவுதேடல்,தமிழ்,தமிழிலை காலத்தோடு வாழ,காலத்தோடு ஓட கட்டாயப்படுத்துகிறது.இருப்பினும் மரபின் தொடர்ச்சி இல்லாமல்,வேர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் நிகழும் அடுத்தக் கட்டப் பாய்ச்சல் உள்ளீடற்றது.நமது மரபின் நமது வேரின் அற்புதக் களஞ்சீயமான சங்கத்தமிழ் இலக்கியப் புதையலை,காலந்தோறும் பயில்வதும்,உணர்வதும்,சொற்களின் புதுப்புது அர்த்தங்களை வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பின்னணியில் தெளிவதும் தேவை. ரூ.25/-

காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்

அருணன் பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது.இரட்டை வாக்குரிமைதான் இருத்தி லட்சியம் என அம்பேத்கர் கருத்திருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை என் சேர்க்கவில்லை?இது போன்ற கேள்விகளுக்கு நீதானமான விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம். ரூ.25/-