வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது. ரூ.150

அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-