மலத்தில் தோய்ந்த மானுடம்

அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியாவையும் தமிழகத்தையும் தலை குனிய வைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இளைய தலைமுறை அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக உருவாகி வரும். அ.முத்துக்கிருஷ்ணன் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலை உக்கிரமாக இதில் பதிவு செய்கிறார் ரூ.60/-

மதவெறி

அ.முத்துக்கிருஷ்ணன் இந்தியா முழுக்க மதக் கலவரங்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. இத்தகைய பின்புலத்துடன் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இன்றுவரையிலும் நடைபெற்ற மதவாத நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ராம் புன்னியானி, மதசார்பின்மை சார்ந்து எழுதியும், இயங்கியும் வருபவர். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வரலாற்று நெருக்கடியினை அவர் நம் கண்முன்னே விவரிக்கிறார். ரூ.50/-