ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்

ஈஸ்வர சந்தானமூர்த்தி,ஆர்.பெரியசாமி உலகமே வியந்த சார்பியல் தத்துவம் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ஐன்ஸ்டின்.இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர்.மனிதர்களின் வாழ்க்கைமுறையை சோசலிச நடைமுறையில்தான் மேம்படுத்த முடியும்.அதற்கான அறிவியலையும்.தத்துவத்தையும் இணைத்த ஐன்ஸ்டினின் கட்டுரைகளைக் கொண்ட நூல். ரூ.60/-

அறிவியல் முன்னோடி மேரி கியூரி

ஆர்.பெரியசாமி “மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.” ரூ.50/-