சார்வாகன் கதைகள்

இப்போது, நான் எழுதியிருப்பவற்றையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது ‘அட, நான் இத்தனை எழுதியிருக்கிறேனா?’ என்ற மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி. நான் உண்மையாக ‘எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப் -போலக் குறைந்தபட்சம் நாலைந்து மடங்காவது எழுதிக் -குவித்திருக்கவேண்டும், என் கை விரல்கள் மரத்து மடங்கி-விட வில்லையே! ஆகவே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் எப்போதும் என்னை ஒரு ‘எழுத்தாள’னாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்-கொள்ளவில்லை.வானத்தில் என்றோ ஒருநாள் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் வால்நட்சத்திரம் போன்ற விசித்திரப்பிறவி என்று தான் நான் நினைத்தேன். எனவேதான் போலும், “இது என் குழந்தை!” என்று நான் மார்தட்டித் திரியவுமில்லை. அப்படித் திரியவேண்டும் என்று தோன்றவுமில்லை. – சார்வாகன் ரூ.400/-