பயனற்ற கண்ணீர்

சிவகாமி இத்தொகுதியிலுள்ள 66 கவிதைகளுமே தனித்தனியே வளமான சிந்தனைச் சிதறல்கள். சிவகாமியின் பல்நோக்குப் பார்வை செயலூக்ம் கொடுக்கவல்லது. இது மொழி பெயர்க்கப்படுமானால் தமிழுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கலாம். தனிப்பட்ட முறையில் பெண்கவிஞர்கள் என்றாலே பெருமூச்சும் உடலும்தான் முதன்மைப் பொருளாகும் (sighs and thighs) என்னும் அறிவற்ற குற்றச்சாட்டிலிருந்து பெண் எழுத்துக்களை மீட்டிருப்பது பெருமை அளிக்கிறது. இந்தக் கவிதைகளில் பெண்ணின் வேதனை மற்ற பல பொருள்களோடு இசைத்துத் தரப்பட்டிருக்கிறது…. காதம்பர் ரூ.60/-

கதவடைப்பு

சிவகாமி நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். சுகுமாரன் ரூ.80/-

உண்மைக்கு முன்னும் பின்னும்

சிவகாமி தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது. ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நான்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். ரூ.270/-