பால்வெளி(பேரண்டக் கவிதைகள்)

சி.ராமலிங்கம் இன்றைய உலகம் அறிவியலின் கைக்குள் அடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.அறிவியலை புறந்தள்ளி மனித வாழ்க்கையை இன்று கற்பணை செய்துகூடப் பார்க்க முடியாது.அப்படிப் பார்த்தால் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்.தனி மனித வாழ்க்கையானாலும் குழு அல்லது சமூக வாழ்க்கையானலும நாம் வழ்வது அறிவியலார்ந்த வாழ்க்கையே.இப்படி அறிவியல்மனித வாழ்க்கையில் இரண்டறக் கலப்பதற்கு எண்ணற்ற அறிவியலாளர்களின் அயராத உழைப்பும்,கண்டுபிடிப்புகளும்தான்.எல்லா காலக்கட்டங்களிலும் அறிவியல் மனித வாழ்க்கைக்கு நெம்புகோலாக இருந்திருக்கிறது.ஆனால் மதம் பல கண்டுபிடிப்புகளையும்,கண்டு பிடிப்பாளர்களையும் தன் கோரப் பற்களால் கடித்துக் குதறியிருக்கிறது.கொன்றும் தீர்த்திருக்கிறது.இன்றுவரை இந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கையில்,பல கண்டு பிடிப்புகளை மதங்கள் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்றைக்கு நம் கண் முன்னே அளப்பரிய சக்தியாய் எழுந்து நிற்கும் அறிவியலை நாம் உணர்வது முக்கியம்.அதோடு நிற்காமல் அறிவியல் கண்ணோட்டம்,அறிவியல் பார்வையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல போதுமான அறிவியல் இலக்கியங்கள் இல்லை.இதனை போதுமான அளவிற்கு வளர்த்தெடுப்பது நம் அனைவரின் கடமை.மற்ற இலக்கியங்கள் பழங்காலந்தொட்டு தொடர்கின்ற நிலையில் அறிவியல் இலக்கியம் தனக்குரிய இடத்தை இன்னும் நிரப்பிக்கொள்ளவில்லை என்றே கருதலாம்.இதன் முயற்சியாக இந்நூலைச் சொல்லலாம். ரூ.150/-

ஆகாயச் சுரங்கம்

சி.ராமலிங்கம் ஆகாயம் என்பது நம் அனைவருக்கும் பிரமிட்பூட்டும் ஒன்று.ஆதி மனிதனிலிருந்து இன்றைக்கு வாழ்ந்துவரும் நவநாகரீக மனிதர்கள் வரைக்கும் ஆகாயத்தை உற்று நோக்காதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.வான் பொருள்களாகிய சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் அந்த காலந்தொட்டே தொடர்ந்து கூர்ந்து நோக்கி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.அவர்கள் பூமிக்கும வானத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் நம்பி வந்தார்கள்.உலக வரலாற்றில் ஆதிகாலந்தொட்டு வானவியல் அறிவு நன்றாக இருந்ததற்கான சான்றுகள் பழங்கால கல்வெட்டுகள்,நூல்கள்,கட்டுமானங்கள் போன்ற பல்வேறு வகைகளில் நமக்குத் தெரிய வருகின்றன.இந்த ஆகாயச் சுரங்கம் என்ற நூல் வானத்தில் நிலைபெற்ற அனைத்து வான் பொருள்களைப் பற்றியும் விளக்கிக் கூறும் நூலல்ல.அவைகள் அனைத்தும் இந்த ஒரு நூலில் சொல்லிவிடவும் முடியாது.இந்த நூலைப் படிப்போருக்கு ஆகாயம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்லும் வகையில் இம்மாதிரி வானவியல் சம்மந்தப்பட்ட நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.அந்த நூல்கள் வரிசையில் ஆகாயச் சுரங்கமும் ஒன்று.இது படிப்போரின் கவனத்தை ஈர்க்குமென்றே நம்புகிறோம். ரூ.100/-