சினிமாவின் மூன்று முகங்கள்

சுதேசமித்திரன் சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை, 1. கமர்ஷியல் சினிமா 2. யதார்த்த சினிமா 3. பாரலல் சினிமா இந்த மூன்றில் எது சரியானது எது பிழையானது என்று ஆராய்வது அவசியமற்றது. ஏனென்றால் இம்மூன்றின் தேவையுமே இன்றியமையாததுதான். இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று சளைத்தவை அல்ல. ஆகவே மூன்றிலும் நம் கண்களில் தென்படும் படங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இவை மூன்றுமில்லாமல் வேறொரு கொடுமைகூட இருக்கிறது அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. ஒன்று மசாலா சினிமா மற்றது இந்திய சினிமா! ரூ.90/-

ஆஸ்பத்திரி

  சுதேசமித்திரன் நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து) ரூ.80/-