அவரவர் வழி

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ்ப் புனைகதை மொழியில் தனித்துவமான ஒரு வெளிப்பாட்டு முறைமையைக் கொண்டவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். குளத்தின் மையத்திலிருந்து பிரிந்து செல்லும் நீர்வளையங்கள் போல, பாத்திரங்களும் சம்பவங்களும் இக்கதைகளில் தொடர்ந்து கலைந்து செல்கின்றன. வாழ்வின் நிச்சயமற்ற பாதைகளில் தற்செயல்களின் சூதாட்டங்கள் வழியே நிகழும் வினோத நாடகங்களை சூட்சுமமான மொழியில் இக்கதைகள் எழுதிச் செல்கின்றன. ரூ.50/-