சாத்தானை முத்தமிடும் கடவுள் Category: Articles.

சாத்தானை முத்தமிடும் கடவுள் ஜி . கார்ல் மார்க்ஸ் கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological  (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும் பிரச்சினைகளை நுணுக்கமாகப் பார்க்காமல் பொதுப்புத்தி சார்ந்து கருத்துக்கள் வெளிவருவதை கார்ல் மார்க்ஸ் கூர்மையாகப் பார்க்கிறார். அவற்றை விமர்சிக்கிறார். மறுக்கிறார். அந்தவகையில் சமூக ஊடகங்களில் மேலெழுந்து வந்து ஒரு பத்து நாட்கள் ஆட்டம் காட்டிவிட்டுப் பின் மறைந்து போகும் நீர்க்குமிழிகள் போன்ற கருத்துகளை விமர்சிக்கும் வகையில் ‘சமூக ஊடகங்களின் மனச்சாட்சியாகவும்’ அவர் தன்னை நிறுத்திக் கொள்கிறார். ரூ.180/-

வருவதற்கு முன்பிருந்த வெயில்

  ஜி . கார்ல் மார்க்ஸ் நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் அடிப்படையில் ஒரு வாசகன். அந்த வாசிப்பின் பலத்தில் சொல்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் சர்வதேசத்தரம் வாய்ந்தவையாக உள்ளன. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும். – சாரு நிவேதிதா ரூ.100/-