நாளை வெகுதூரம்

ஜி. குப்புசாமி ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ள இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகள் சமகால உலக புனைகதை இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிப்பவை. கதைகளின் தேர்வும் மொழியாக்கத்தின் சரளமும் காரணமாக இக்கதைகள் அவை இதழ்களில் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவை. ரூ.130/-

கனவுகளுடன் பகடையாடுபவர்

ரூ.140/- நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.