அமரர் சுஜாதா

எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு.  எழுத்தாளர் சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து அறிவியல் கதைகள் எழுதி வந்தவர், அவருக்கு செய்யும் ஒரு காணிக்கையாகவே அமரர் சுஜாதா என்கிற சிறுகதை அமைந்துள்ளது. சோறியம், மகா பெரியவர், அமில தேவதைகள், கிளாமிடான் உள்ளிட்ட கதைகள் தமிழ்ச் சூழலில் புதிய அறிவியல் புனைவுகளுக்கு வழிவகுத்தவை. துணிச்சல் மிகுந்த கதைகள் எனவும் குறிப்பிடலாம். ரூ.120/-  

மீன்மலர்

கடவுள், இசை, காமம் என எல்லாவற்றையுமே விவாதத்துக்குள்ளாக்கும் வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு. மீனையும் மலரையும் ஒப்புமைப்படுத்தும் சிறுகதை ஒரு தத்துவவாதத்தை சிறுகதையினூடே சிறப்பாகச் செய்திருக்கிறது. மனக்குகை ஓவியம் சிறுகதை, மனித வாழ்வின் உளவியல் சிக்கலை முன்வைக்கிறது. மனம் என அமையப் பெற்ற உயிரினமான மனிதனுக்கான சிக்கலை விவரிக்கும் கதை அது. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத நீரோடை போன்ற நடையில் இவற்றை வாசிப்பது பேரனுபவம். ரூ. 85/-