கானல் வரி

தமிழ் நதி தன் வாழ்வனுபவத்தின் ஊடாகக் காதல் என்கிற பிணைப்பு பற்றிய பல புரிதல்களோடும், கருத்துகளோடும், தன்நண்பர்களின் அனுபவப் பகிர்தல்கள் ஏற்படுத்திய சிந்தனைகளோடும் – ஊடகங்கள், இலக்கியப் பதிவுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்களோடும் – இவை அனைத்தின் கூட்டுணர்வுகள் ஏற்படுத்திய தளத்தில் நின்று நிகழ்காலம், நிகழ் உலகக் காதல், காதல் கொண்ட மனிதர்கள், காதலின் பகைப்புலன்கள் பற்றிய தன் சிந்தனைகளைக் கதையாகப் படைத்திருக்கிறார் தமிழ்நதி. அதனாலேயே பல பரிமாணங்களில் இக்கதையின் வாசிப்புத் தளமும் வெளியும் விரிவடைகிறது. அதுவே இந்த நாவலை அடர்த்தி பெறவும் வைத்திருக்கிறது. பிரபஞ்சன் முன்னுரையிலிருந்து. ரூ.50/-