பாபுஜியின் மரணம்

நிஜந்தன் மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் புதைவுகளை வாழ்வின் முடிவில் வெளிப்படுத்தும் மனிதப் போக்கை பதிவு செய்கிறது இந்த நாவல். ரூ.120/-

சுவை, மணம், நிறம்

  உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை. ரூ.150/-

மேகமூட்டம்

நிஜந்தன் எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. ரூ.90/-