என் இலக்கிய நண்பர்கள்

ந. முருகேச பாண்டியன் படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகள் குறித்த பதிவுகள் தமிழில் அரிதாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ந.முருகேச பாண்டியன் தன் இலக்கிய நண்பர்கள் குறித்த சுவாரஸ்யமான மனப்பதிவுகளை இந்நூலில் முன் வைக்கிறார். நகுலன், சுந்தர ராமசாமி, கலாப்ரியா, பிரபஞ்சன், வண்ணநிலவன், கோணங்கி, விக்கிரமாதித்யன் உள்ளிட்ட பதினைந்து படைப்பாளிகள் குறித்து எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அப்படைப்பாளிகளின் வாழ்வையும் எழுத்தையும் நெருங்கிச் செல்ல பெரிதும் துணைபுரிகின்றன. ரூ.70/-

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

ந. முருகேச பாண்டியன் நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும் பண்பாட்டினையும் அறிமுகம் செய்கின்றது. எதிர்காலம் பற்றிய வினோத வெளிக்குள் பயணிக்கும் திறனுடைய குடுகுடுப்பைக்காரர்கள் பற்றிய தகவல்கள் வாசிப்பின் வழியாகப் புதிய அனுபவங்களைத் தரக்கூடியன ரூ.60/-

பெருகும் வேட்கை

ந. முருகேச பாண்டியன் அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஒடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுரைகளில் நிறுவுகிறார். ரூ.100/-

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்

ந. முருகேச பாண்டியன் முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக, கலாச்சார சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார். ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.160/-

கிராமத்து தெருக்களின் வழியே

ந. முருகேச பாண்டியன் இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரிய ஆவணமாக ந.முருகேசபாண்டியன் இக்கட்டுரைகளை எழுதிச் செல்கிறார். ரூ.90/-