வார்த்தையின் ரஸவாதம்

பிரம்மராஜன் இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதாரிகளிடமிருந்து தப்பி வருவதற்கான வழியும்கூட, கழிவு அல்லது உபயோகமற்ற வஸ்துகள் புவிப்பரப்பு முழுவதும் மனிதமயத்தில் நிறைந்து வரும் வேளையில் எதிரானவற்றிலிருந்து சொல்லடுக்கை வார்த்தை வகைமையைத் தேர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும் கட்டுரைகள். ரூ.130/-