வேளாண் சமூகத்தை புறக்கணித்த திமுக-அதிமுக

பெ. சண்முகம் ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதி என்ற ஆள்மாற்றத்திற்கு பதிலாக மாற்றுக் கொள்ளையுடனான ஆட்சிமாற்றம் என்பதுதான் உண்மையில் மாற்றம் ஏற்பட வழிபிறக்கும்.அதற்கொரு வாய்பளிக்க வேண்டாமா? இந்த முறை மாற்றித்தான் வாக்களித்துப் பார்ப்போமே! ரூ.10/-

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும்

பெ.சண்முகம் “வாச்சாத்தி….தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம். 1992க்கு முன்பு இப்படி ஒரு ஊர் இருப்பதே யாருக்கும் தெரியாது.இன்று இந்த கிராமத்தின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற அளவுக்கு பிரபலம்.அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலையோ மதிப்பிட முடியாதது.காரணம் எதுவுமின்றி அப்பாவி மலைவாழ்மக்கள் வனத்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர்.இளம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.நினைத்துப் பார்க்க இயலாத கொடுமைகள் அவர்களின் மீது அரங்கேற்றப்பட்டன.அப்போதைய ஜெயலலிதா அரசு இதை மௌனமாய் வேடிக்கை பார்த்தது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டக் களங்கள் இன்றைக்கு அந்த மக்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் தேடித் தந்திருக்கிறது.இந்த நீண்ட போரட்டத்தை அதன் வெம்மை மாறாது இந்நூல் பதிவு செய்திருக்கிறது.” ரூ.5/-