பெர்லின் இரவுகள்

பொ. கருணாகரமூர்த்தி பெர்லின் நகரின் இரவு வாழ்க்கையை ஒரு காரோட்டியின் கண்கள் வழியே சித்தரிக்கிறது பொ.கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள். இந்த இரவுகளைக் கடந்து செல்லும் மனிதர்களும் நிகழ்வுகளும் உருவாக்கும் மனச்சித்திரங்கள் வேடிக்கையும், வினோதமும் மன நெகிழ்ச்சியும் கொண்டவை. விலகி நிற்கும் ஒரு பார்வையாளனின் மொழியில் சொல்லப்படும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள் அதன் துல்லியமான புனைகதை மொழியால் பெரும் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. ரூ.75/-

பதுங்குகுழி

பொ. கருணாகரமூர்த்தி அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் இவர் எளிதாக இடம் பெறுகிறார். இவரது கலை தமிழுக்குக் கிடைத்த ஒரு பேறு என்பதில் ஐயமில்லை. கோவை ஞானி (முன்னுரையிலிருந்து) ரூ.130/-