இது எனது நகரம் இல்லை

யமுனா ராஜேந்திரன் மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து மேற்கில் வாழ எனக்கு விருப்பமில்லை. மேற்குலகை நான் வெறுக்கிறேன். நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும் தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். உணர்வுபூர்வமாகவோ பொருளாதார அடிப்பயிலோ மேற்கில் வாழ்வது எனக்குச் சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன். தஸ்லீமா நஸ் ரீன் ரூ.75/-

ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

யமுனா ராஜேந்திரன் எனது கவிதைகள் அவிழும் பிரபஞ்சம் எனது உடல்தான். என்னளவில் எழுதுவது என்பது அடிப்படையில் உடல்சார்ந்த இயக்கம்தான். நான் எப்போதும் சொல்வதுண்டு, நான் எனது விரல் நகங்களால்தான் எழுதுகிறேன். எனது சருமத்தின் மீது எனது உடலில் எழுதுகிறேன். உடலின் மேற்பரப்பை நான் உறித்தெடுக்க விரும்புகிறேன். அதற்காக எனது உடம்பையும் எனது நகங்களையும் நான் உபயோகிக்கிறேன். இவைகளே எனது கருவிகள். சிருங்காரமே வாழ்வின் நாடித்துடிப்பு, மரணத்துடன் சிருங்காரம் நெருக்கமாக உறவுகொண்டிருக்கிறது என்றபோதும, நான் வாழ்கிறேன் என்பதற்கான உணர்வை இதுவே எனக்குத் தருகிறது. ஜோமனா ஹித்தாத் ரூ.70/-

நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்

யமுனா ராஜேந்திரன் மஹ்மூத் தர்வீஷ் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்து வருபவர். பாலஸ்தீனத்தில் பர்வேஎனும் சிற்றூரில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி பிறந்த அவர் தமது 67ஆம் வயதில்,2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரண முற்றார். தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தெனக்கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும், ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புக்களின் தொகுதி இது. ரூ.300/-

ஹிட்லரின் முதல் புகைப்படம்

யமுனா ராஜேந்திரன் இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்காவின் கவிதைகளுக்குள் நாம் செல்லும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்து போகிறோம். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் என்ற உண்மை பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தர்வகளுக்குப் புரியும். கோவை ஞானி ரூ.60/-  

இந்திய பிரிவினை சினிமா

யமுனா ராஜேந்திரன் இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளாக்கிக் கொள்கிறது. இந்து முஸ்லீம் பிரச்சினையை இந்தியப் பிரிவினையின் தடத்தில் தேடிச் செல்லும் படங்கள் குறித்த விரிவான பார்வைகளை முன்வைக்கிறது இந்த நூல். கரம் ஹவா, எர்த் மம்மோ, தமஸ், டிரெயின் டு பாகிஸ்தான், காமோஸி பாணி, ஹேராம் எனப் பல்வேறு படங்களில் வெளிப்படும் பிரிவினையின் ஆதாரமான துயரங்களையும் அழிவையும் பரிசீலிக்கும் யமுனா ராஜேந்திரன் சினிமாவில் அடிப்படைவாத அரசியல் செயல்படும் விதத்தையும் விவாதிக்கிறார். ரூ.50/-

நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை

யமுனா ராஜேந்திரன் பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளைப் பின்நவீனத்துவத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும் அயர்லாந்த கலாச்சார மார்க்சியரான டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவியத் பின்னணியில் பேசும் அர்ஜென்டீன இடதுசாரியான எர்னஸ்ட் லக்லாவ், அடையாள அரசியல் மற்றும் தேசியம் குறித்துத் தீவிர விமர்சனங்கள் கொண்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளர் அய்ஜஸ் அஹமது. வித்தியாச அரசியலின் நெருக்கடி குறித்துப் பேசும் வெகுஜனக் கலை விமர்சகரான ஆப்பிரிக்கக் கல்வியாளர் ஸ்டுவர்ட் ஹால், பின்நவீனத்துவத்தின் கலாச்சாரச் சார்புவாதம் மற்றும் அதனது போலி விஞ்ஞானக் கோருதல்களை விமர்சிக்கும் பௌதிகவியலாளரும் அமெரிக்க மார்க்சியருமான அலன் ஸாக்கல், பிரெஞ்சுச் சமூகவியலாளரும் இடதுசாரிக் கோட்பாட்டாளருமான காலஞ்சென்ற பியர்ரோ போர்தியோ போன்றோரது விரிவான நேர்முகங்களைக் கொண்டதாக இந்நூல் விரிகிறது. பின் நவீனத்துவத்தை அதனது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் இந்த நூல், மார்க்சியத்திற்கும் பின் நவீனத்துவத்திற்கும் தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையில் கடந்த இருபது ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் கோட்பாட்டுச் சர்ச்சைகளைத் தொகுத்துத் தருகிறது. ரூ.140/-

அரசியல் இஸ்லாம்

யமுனா ராஜேந்திரன் ‘குரான்’ மற்றும் ‘ஹதித்’ எனும் இரு இஸ்லாமியப் பிரதிகளின் அடிப்படையில் நவீன காலத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என அரசியல் இஸ்லாம் கருதுகிறது. அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைப்பாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் முயல்கிறது. இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன் ரூ.180/-

புத்தனின் பெயரால்

யமுனா ராஜேந்திரன் முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்களையும் நேசத்தையும், வெறுப்பையும் துயர்களையும் புரிந்து கொள்ள முனைந்ததாகவே எனது திரைப்பயணம்ட இருந்தது. வரலாற்று நூல்களின் வழி நான் வந்து அடைந்த புரிதலை விடவும் ஆழமான புரிதலை இந்தத் திரைப்படங்கள் எனக்கு அளித்தன என்பதனை நான் நிச்சயமாகவே சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளாக நான் தேடித் தேடிப் பார்த்து வந்திருக்கிற அந்த வரலாற்றின் சாட்சியங்கள் வெறும் நினைவுகளாக அழிந்துபோய்விட விட்டுவிட எனக்குச் சம்மதமில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விளைவாக அந்த மக்கள் எதிர்கொண்ட துயர்களின் சாட்சியங்களையும் திரைப்படப் பிம்பங்களின் வழி இங்கு நான் பதிந்திருக்கிறேன். முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தில் மரணமுற்ற வெகு மக்களுக்கும் போராளிகளுக்கும் என் வரையிலான ஆத்மார்த்தமான நினைவுகூரல் இந்தப் பதிவுகள். அவர்தம் நினைவுகளின் சாட்சியமாக இது நின்று வாழும் என நம்புகிறேன். யமுனா ராஜேந்திரன் ரூ.140/-

பாப்லோ நெரூதாவின் துரோகம்

  யமுனா ராஜேந்திரன் யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளைவே இந்த எழுத்துக்கள். சோவியத் யூனியனது வீழ்ச்சியையொட்டி மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் மீதான உலக அளவிலான தாக்குதலை பின்நவீனத்துவவாதிகளும், தூய கலை இலக்கியவாதிகளும் முனைப்புடன் மேற்கொண்டிருந்த வேளையில், பாசிசத்தை ஸ்டாலினியத்துடன் சமப்படுத்தி வரலாறு முழுக்கவுமான மார்க்சியர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் களங்கப்படுத்தப்பட்ட வேளையில், வரலாறு குறித்த மௌனங்களையும் ஞாபக மறதிகளின் இருண்ட வெளிகளையும் உடைக்கும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகளும் பாசிசத்திற்கு எதிரான நிலைப்பாடு மேற்கொண்ட, மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற கலைஞர்கள், சமவேளையில் ஸ்டாலினியம் குறித்துச் சிக்கலான அறவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் எனும் வரலாற்றுப் புரிதலுடன் அத்தகைய கலைஞர்களின் சுயவிசாரணைகளையும் ஆன்ம தரிசனத்தையும் முன்வைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளும் பாலியல் மீறல்களை முன்வைத்து மார்க்சியர்களின் வாழ்வும் அவர்தம் தத்துவப் பங்களிப்பும் மலினப்படுத்தப்பட்ட வேளையில், அடிப்படையில் மனிதஜீவிகளாக அவர்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. பாசிசம் குறித்த மௌனமும் ஞாபகமறதிகளும் பற்றியதாகத் துவங்கி, பிரெஞ்சுத் தத்துவவாதி ழாக் தெரிதாவுக்கான அஞ்சலியில் முடிவுறும் யமுனா ராஜேந்திரனின் இந்நூல், ஒரு வகையில் சென்ற நூற்றாண்டின் மகத்தான கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவு கூரலாகவே உருவாகி இருக்கிறது ரூ.125/-

ஜிப்ஸியின் துயர நடனம்

யமுனா ராஜேந்திரன் ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித்திரவதையை இன்பமாகத் துயக்கும் தத்துவ மனம், பெண்ணுடலை விலக்கிய மதம், உடலின் வழி தன் ஆன்மாவை வெளியிட்ட கலைமனம், இந்தியச் சிறுபான்மையின மக்களின் கையறுநிலை, ஈராக் முதல் குன்டனாமோ சித்திரவதை முகாம் வரை பைசாச அரசொன்று அம்மக்களின் மீது சுமத்திய சித்திரவதை அமைப்பு என இக்கட்டுரைகள் அனைத்திலும் சித்திரவதைக்கு எதிரான மனிதரின் சீற்றமும் வாழ்தலுக்கான அவர்களது மனித வேட்கையும் தான் வெளிப்பட்டிருக்கிறது. ரூ.120/-