இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

ராஜ்சிவா உலகில் விநோதங்கள் என்று கருதப்படுபவைகளில் மிகவும் முக்கியமான விநோதமாகக் கணிக்கப்படுவது, க்ராப் சர்க்கிள்ஸ் என்றழைக்கப்படும் பயிர் வட்ட விநோதம்தான். இந்த க்ராப் சர்க்கிள்கள் யாரால், ஏன், எப்படி உருவாக்கப்படுகின்றன? என்ற கேள்விதான் இங்கு மர்மப்பாதைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இவை தொடர்பாக உலகம் முழுவதும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றும், அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன என்றும் தெரியவருகின்றனது. இந்த மர்மங்களில் சிலவற்றை ஆராய்வதே இந்த நூலின் நோக்கம். ரூ.175/-

எப்போது அழியும் இந்த உலகம்?

ராஜ்சிவா தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு எப்படி இப்படிப்பட்ட அறிவு வந்திருக்க வேண்டும் என்பதை மிகவும் சுவாரஸ்யமான தகவல்களுடன் ராஜ்சிவா இந்த நூலில் ஆராய்கிறார். ரூ.140/-

நிலவில் ஒருவன்

ராஜ்சிவா ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. ரூ.100/-

இறந்த பின்னும் இருக்கிறோமா?

ராஜ்சிவா தமிழில் அறிவியல் புதிர்களைப் பற்றி எழுதும் எழுதும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் ராஜ் சிவா. அவரது இதற்கு முந்தைய நூல்களான எப்போது அழியும் இந்த உலகம்?, இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளிவரும் இந்த நூல் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திற்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது. ரூ.120/-