பார்வைகளும் பதிவுகளும்

வாஸந்தி அரசியல் நெருக்கடி மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்தியா டுடே இதழில் வாஸந்தி எழுதிய இக்கட்டுரைகள் சுயமான சிந்தனையும் துணிச்சலான பார்வையும் கொண்டவை. கலை, கலாச்சாரம், அரசியல் எனப் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் இக்கட்டுரைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. ரூ.110/-

இந்தியா எனும் ஐதீகம்

வாஸந்தி கேலி, கண்டனம், சீற்றம், நெகிழ்ச்சி என வாஸந்தியின் மொழி மெழுகுத்தன்மை கொண்டது. வாசகனுடன் அணுக்கமாக உரையாடுவது. அரசியல், பண்பாட்டு, இலக்கியம் என பலதரப்பட்ட தளங்களுள் பயணிக்கிற கட்டுரைகள் இவை. தயக்கமின்றி வெளிப்படுத்தப்படும் வாஸந்தியின் கருத்துக்கள் சார்பு நிலை அற்ற நேர்மையை கொண்டவை. ரூ.75/-

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள்

வாஸந்தி மாநில வரம்பு மீறிய பரந்துபட்ட தன்மை கொண்டவை வாஸந்தியின் அரசியல் பண்பாட்டு கட்டுரைகள். பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டுணர்ந்த வியப்பை வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் மொழி, இன எல்லைகள் கடந்த புரிதலை வலியுறுத்துகிறது. மேலும் வாஸந்தியின் குரல் அறிவுஜீவியின் எந்த பாவனைகளும் அற்றது; அறவுணர்வை தன் ஆதார ஊக்கமாக கொண்டது. தமிழ்ப்பரப்பை இந்த வெளிச்சமேறிய சிந்தனைகள் விகாசமாக்குகின்றன ரூ.90/-

தெய்வங்கள் எழுக

வாஸந்தி ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமகாலத்தில் நம்மை உலுக்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பற்றிய அழுத்தமான பார்வைகளை முன்வைக்கும் பதிவுகளுடன் நமது பொதுவான வாழ்வியல், சமூகவியல் நெருக்கடிகளைப் பேசும் கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அநீதியின் அதிகாரத்திற்கு சமூகம் தலைவணங்கிவிடாமல் நீதியைப் பற்றிய நினைவை எழுப்பும் எழுத்துகள் இவை. ரூ.160/-