Description
குள.சண்முக சுந்தரம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொருவிதமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வருகிறார்கள். அனைத்தும் தங்கள் குல மேம்பாட்டுக்காக தங்கள் தெய்வங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. ஒரே கிராமத்தில் கூடிவாழும் பல சமூகத்தினர், ஊரின் இறையாண்மையைக் காக்கும்பொருட்டு, பொதுவான நம்பிக்கை கொண்டு திருவிழாக்கள் நடத்த கோயில்களில் கூடுவது வழக்கம். ஒவ்வொரு கிராமத்திலும் வழிவழியாக நிலவிவரும் பூர்வீகக் கதைகளுக்குச் சொந்தமான கோயில்களும் உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்றும் நம்புகிறார்கள். தங்களைப் பீடித்த இனம்புரியாத நோய்களைத் தீர்க்கும் அன்பான மருத்துவராகவும், எதிரிகளிடமிருந்து தங்கள் ஊரைக் காப்பாற்றும் வீரமிக்க தளபதியாகவும், வில்லங்கமான பஞ்சாயத்துகளைத் தீர்க்கும் நடுநிலையான நீதிபதியாகவும் அந்தத் தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டு கோயில்களை எழுப்பியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ‘எல்லை சாமி’களைத் தேடிக் கண்டுபிடித்து, அந்தத் தெய்வங்களின் வரலாற்றைச் சுவைபடத் தொகுத்து, பக்திப் பரவசத்த
ரூ.70/-
Reviews
There are no reviews yet.