Description
ராமானுஜம் ஸ்ரீதர்
‘இது போட்டிகள் நிறைந்த உலகம்.. இங்கே தனித்துத் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்..’ என்று ‘பிராண்ட்’ பற்றிய சுவையான இந்த நூலை ஆரம்பிக்கிறார் ராமானுஜம் ஸ்ரீதர். அதாவது, மக்கள் மனதைக் கவர்ந்து, விற்பனை சந்தையில் தனித்து தெரிந்து வெற்றிக்கொடி நாட்டிய பொருட்களே பிராண்ட் (BRAND) வரிசையில் இடம் பிடிக்கின்றன என்பதை விளக்கும் நூல் இது. ‘பிராண்ட்’ என்பது ஒரு பொருளாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம்; ஏன், தனி மனிதர்களாகக்கூட இருக்கலாம். பிராண்டை உருவாக்குவதில் பெயர், லோகோ, தரம், சேவை, விளம்பரம் போன்றவற்றின் பங்கு குறித்தும், நாணயம் விகடன் இதழில், ‘என் வழி தனி வழி’ என்ற தலைப்பில் ராமானுஜம் ஸ்ரீதர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒரு பொருளை பிராண்டிங் செய்வது எப்படி, பிராண்டிங் செய்வதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்னென்ன என்பவற்றைத் தெளிவாக அழகான சின்ன சின்ன உதாரணங்களுடன், சொந்த அனுபவங்களையும் கலந்து எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். மேலும், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களோடும், அந்தப் பெயரை நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ள _ மக்களின் மனதில
ரூ.65/-
Reviews
There are no reviews yet.