Description
ஸ்டாலின் ராஜாங்கம்
பாரம்பர்யம், பண்பாடு, கலாசாரம், உண்மை, நேர்மை… என்று எந்தச் சாயத்தைப் போட்டுப் பூசினாலும் இந்தியச் சமூக அமைப்பில் எல்லாவற்றுக்கும் பிரதான பாத்திரம் வகிப்பது சாதிதான், இந்தியன், தமிழன் என்ற அனைத்தும் தங்களது சாதிக் குணத்தை மறைக்கும் ஒருவகைத் தந்திரமாகவே அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிநாதமாகச் செயல்படுகிறது. பணமும் படிப்பும் இன்று இரண்டு கண்களாகத் தங்களின் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் பெற்றோர்… மூன்றாவதாக சாதிப் பெருமையையும் ஒருசேரப் புகட்டி வளர்க்கிறார்கள். அதனால்தான் பெரியார், “சாதியைக்கூட ஒழித்துவிடலாம். சாதிப் பெருமையையும் அதன் குணம் என்று சொல்லப்படுபவற்றையும் ஒழிப்பது கஷ்டம்!” என்றார். இந்தக் கஷ்டத்தை சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் தலித் மக்கள் எப்படி அனுபவிக்கிறார்கள், ஏன் அனுபவிக்கிறார்கள், எதனால் அல்லது யாரால் அனுபவிக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரைகள் இவை!
‘நாட்டையே உலுக்கிப் பின்னர் காணாமல்போன 50 தலைப்புச் செய்திகள் பற்றிய சிறப்பிதழை செய்தி இதழொன்று அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில் தலித் செய்தி ஒன்றுகூட இல்லை. அந்த அளவுக்குத் தலித்துகள் மீதான வன்முறை இங்கு சாதாரணமாக இருக்கிறது!’ என்கின்ற கோபத்துடன் தனது கட்டுரைகளை ஸ்டாலின் ராஜாங்கம் தொடங்குகிறார்.
ரூ.120/-
Reviews
There are no reviews yet.